துறைமுக நகரத்தைச் சீனாவுக்கு வழங்குவதால் எமது எதிர்கால சந்ததியும் பாதிப்படையும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எதிர் கட்சிகளின் உதவியை நாடவேண்டும் அல்லது தங்களது கட்சியிலே இருந்த புத்திஜீவிகளையாவது இணைத்துக் கொள்ள வேண்டும்.
துறைமுக நகரத்தை அரசு சீனாவுக்கு தாரை வார்த்துள்ளது.இதனால் எமது எதிர்கால தலைமுறையினருக்கு பாதிப்பு ஏற்படும். பசில் ராஜபக்ஷ வெளிநாட்டு பிரஜை என்பதை மீண்டும் காட்டியுள்ளார்.இக்கட்டான சூழ்நிலையில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதனூடாக தமது இறந்த பிள்ளைகளை வணங்குவதை அரசு தடுக்கிறது )
Post a Comment