ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விக்கெட் காப்பாளர் விருத்திமான் சஹா கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
நேற்றைய நாளில் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தாவுக்கு விளையாடுகின்ற வருன் சக்கரவர்த்தி , சந்தீப் வாரியர் அதேபோன்று சென்னையின் பந்து வீச்சு பயிற்சியாளர் லக்ஸ்மிபதி பாலாஜி , CEO காசி விஸ்வநாதன் அதேபோன்று பஸ் கிளீனர் ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்.
இப்படியான நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்னுமொரு ஐபிஎல் வீர்ர் தொற்றுக்கு இலக்காகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை சென்னை அணி விளையாட இருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன , அதே நேரத்தில் மே மாதம் 7 ஆம் திகதியிலிருந்து அனைத்து ஆட்டங்களையும் மும்பை நகரில் நடத்துவதற்கும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
Post a Comment