ஜுன் 14 திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் வாய்ப்பு - அமைச்சர் கெகலிய - Yarl Voice ஜுன் 14 திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் வாய்ப்பு - அமைச்சர் கெகலிய - Yarl Voice

ஜுன் 14 திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் வாய்ப்பு - அமைச்சர் கெகலிய




நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 14 ஆம் திகதிக்குப் பின்னரும் நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதிக்குப் பின்னரும் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமாயின், பொது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும்.

இருப்பினும், நாட்டில் தற்போதுள்ள நிலைமை காரணமாக உறுதியான அறிவிப்பு எதனையும் வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post