இலங்கை இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஐசிசியின் ஆட்ட நடுவராக செயற்பட்ட பில்விட்டி கேஸ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
25ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளின் மூலம் இது உறுதியாகியுள்ளது.
எனினும் நோய் அறிகுறிகளை அவர் வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐசிசி அவர் பத்துநாட்களிற்கு சுயதனிமைப்படுத்தலை முன்னெடுப்பார் என தெரிவித்துள்ளது.
ஆட்ட நடுவருடன் தொடர்பிலிருந்த மேலும் பத்துபேரும் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்கவுள்ளனர் என ஐசிசி தெரிவித்துள்ளது.
எனினும் இங்கிலாந்து இலங்கை அணிகளின் வீரர்கள் பாதிக்கப்படவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
Post a Comment