இலங்கையில் இன்று 2419 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice இலங்கையில் இன்று 2419 பேருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

இலங்கையில் இன்று 2419 பேருக்கு கொரோனா தொற்று



இலங்கையில் நேற்று 2419 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இன்றுவரை 230,675 ஆக தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர்.

மேலும் தொற்றாளர்களில் 194,145 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post