யாழ் மாவட்டத்தில் இதுவரையில் 65,120 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது!
அரசினால் தற்போது வழங்கப்பட்டும்
சமுர்த்தி பெறும் குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கான 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு யாழ் மாவட்டத்தில் இதுவரை 65 ஆயிரத்து 120 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களுக்கும் அடுத்த கட்டமாக குறித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment