மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் இன்று காலை இராணுவத்தினரால்தண்டிக்கப்பட்டனர்
இந்நிலையில் மேல்மாகாணத்திற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டமா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது
மேல்மாகாணத்தில் வீதிகளில் பெருமளவு வாகனங்கள் காணப்படும் படங்களையும் மட்டக்களப்பில் தண்டனை வழங்கப்பட்ட படத்தினையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கிழக்கு மாகாணம் எதிர் மேல்மாகாணம் என பதிவிட்டுள்ளார்
ஒருநாடு நூறு சட்டங்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
Post a Comment