ஒரு வயதுக் குழந்தையின் தாயார் திடீரென மரணம்! - Yarl Voice ஒரு வயதுக் குழந்தையின் தாயார் திடீரென மரணம்! - Yarl Voice

ஒரு வயதுக் குழந்தையின் தாயார் திடீரென மரணம்!



சாவகச்சேரி மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார். 

வயிற்று வலி காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரி (வயது-40) என்ற ஒரு வயதுக் குழந்தையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post