வெலிகட சிறைச்சாலை கைதிகள் சிலர் இன்று சிறைக் கூரையின் மேல் ஏறி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அனைத்து கைதிகளுக்கும் பிரிவினையின்றி சம அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரிய இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண தண்டனையில் உள்ள கைதிகள் அத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோருகின்றனர்.
இதேவேளை மஹர சிறைச்சாலையின் கைதிகள் குழு நேற்று உண்ணாவிரதத்தை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment