தனித்திருந்த பெண் மீது ஈச்சமோட்டையில் வெட்டு -பொலிஸாரிடம் முறையிட அச்சம்- - Yarl Voice தனித்திருந்த பெண் மீது ஈச்சமோட்டையில் வெட்டு -பொலிஸாரிடம் முறையிட அச்சம்- - Yarl Voice

தனித்திருந்த பெண் மீது ஈச்சமோட்டையில் வெட்டு -பொலிஸாரிடம் முறையிட அச்சம்-



யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் கணவனை இழந்து தனித்திருக்கும் குடும்ப பெண் கழுத்தில்   வாள் வெட்டு காயத்துடன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.

இச் சம்பவம் நேற்று காலை 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண் கொழும்புத்துறை பகுதியிலுள்ள தனியார்  வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ள போதும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையென தெரிய வருகின்றது.

தாக்குதலாளியின் அச்சம் காரணமாக முறைப்பாடு செய்ய அஞ்சியிருக்கலாம் என தாக்குதலை உறுதிப்படுத்திய அயலவர்கள்  தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post