பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு



பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர்கள் ஆசிரியர்கள் நிர்வாகதரப்பினர் கல்விசாரா ஊழியர்களிற்கு வழங்குவதற்கு 270,020 கொரோhனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என கல்வியமைச்சர் ஜி;.எல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதிபர்கள் ஆசிரியர்கள் நிர்வாகதரப்பினர் கல்விசாரா ஊழியர்களிற்கு தடுப்பூசியை வழங்கிய பின்னரே பாடசாலைகளை ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் திட்டம்  எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பித்த பின்னர் என்ன நடைபெறும் என்பது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டத்தினை மிகவும் நுட்பமாக ஆராயவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் மற்றும் ஏனைய கல்விமுறைகள் பாடசாலை கல்விக்கு மாற்றீடு இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை ஒன்லைன் கல்விக்கு தயார்படுத்துவதற்கு அதிக காலம் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post