இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டி தொகுதிக்கிளை மற்றும் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட 300 குடும்பங்களிற்கான உலர் உணவுப் பொதிகள் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களால் இன்றைய தினம் வழங்கப்பட்டது.
இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் மற்றும் தவிசாளர் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
மற்றும் கரவெட்டி கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் வேண்டிகோளிற் இணங்க மகளிர் கமக்கார அமைப்பின் பிரதி நிதிகளிற்கு ஒரு தொகை உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
Post a Comment