அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் 10 வது திருவிழாவான தேர்த்திருவிழாவான நேற்று, இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
தற்போது தீவிர நோய்ப்பரவல் காரணமாக அணைத்து ஆலயங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அச்சுவேலி சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமான நாள் முதல் பக்தர்கள் உள்ளே செல்ல மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந் நிலையில் கொடியேற்ற திருவிழாவிற்கும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இன்று தேர்த்திருவிழாவிற்கு ஆலயத்தின் தர்மகத்தா தனது தன்னிச்சையான முடிவினால் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவ வீரர்களை அழைத்து வந்து சுவாமியினை தோலில் சுமப்பதற்கு இடம் அழித்துள்ளார்.
கோயில் நலன் சார் இளைஞர்கள் அதிகளவானோர் இருக்கின்ற அளவில் இராணுவத்தினரை அழைத்து வந்து சுவாமி காவ வைத்தமை கோயில் இளைஞர்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment