பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்கப்படும் என எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருபவர்களுக்காகவும் நாட்டை திறக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினர் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment