எந்த சூழ்நிலையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தாது - பிரதமர் - Yarl Voice எந்த சூழ்நிலையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தாது - பிரதமர் - Yarl Voice

எந்த சூழ்நிலையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தாது - பிரதமர்



எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கொவிட் 19 லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு ஆதரவளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளா.ர்

கொரோனாவைரஸ் காரணமாக அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்தினால் மக்கள் பெரும் நெருக்கடிகளிற்கு உள்ளாவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக அரசாங்கம் 262 பில்லியனை செலவிட்டுள்ளது அரசாங்கம் பொதுமக்களின் சுகாதாரம் பாதுகாப்பு குறித்து கரிசனையுடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post