ரஷ்யா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் -அமெரிக்கா எச்சரிக்கை - Yarl Voice ரஷ்யா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் -அமெரிக்கா எச்சரிக்கை - Yarl Voice

ரஷ்யா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் -அமெரிக்கா எச்சரிக்கை




ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் சமீப காலமாக சைபர் தாக்குதல் மிக பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கணினிகளில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா அதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான 'கசேயா' மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 'ரான்சம்வேர்' தாக்குதல் நடத்தப்பட்டது. 

இது கடந்த டிசம்பர் மாதம் அரசு துறைகளை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை விட பல மடங்கு பெரிது என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.

'கசேயா' நிறுவனம் பெரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் மென்பொருள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் நிறுவனம் என்பதால் இந்த நிறுவனம் மீதான சைபர் தாக்குதலால் 1,500 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

இதனிடையே ரஷியாவை சேர்ந்த ஆர் வில் எனும் ஹேக்கர் குழுதான் இந்த 'ரான்சம்வேர்' தாக்குதலை நடத்தியதாகவும், அந்த ஹேக்கர் குழுவுக்கு ரஷிய அரசு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 
ஆனால் ரஷியா வழக்கம்போல் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷிய அதிபர் புடினை நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இருவருக்கும் இடையிலான இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post