வடபகுதி மீனவர்களுடன் இணைந்து சீனாவின் சட்டவிரோத கடலட்டை பண்ணையை அகற்றவேண்டிய நிலையேற்படும் - சிவாஜிலிங்கம் - Yarl Voice வடபகுதி மீனவர்களுடன் இணைந்து சீனாவின் சட்டவிரோத கடலட்டை பண்ணையை அகற்றவேண்டிய நிலையேற்படும் - சிவாஜிலிங்கம் - Yarl Voice

வடபகுதி மீனவர்களுடன் இணைந்து சீனாவின் சட்டவிரோத கடலட்டை பண்ணையை அகற்றவேண்டிய நிலையேற்படும் - சிவாஜிலிங்கம்




பூநகரிப்பகுதியில் உள்ள சீனாவின் கடலட்டை பண்ணையை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் வடபகுதி மீனவர்களுடன் இணைந்து அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரிப் பகுதியிலுள்ள சீனாவின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,“பூநகரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சீனாவின் கடலட்டைப் பண்ணை இன்னும் அகற்றப்படவில்லை.

ஆகவே இன்றிலிருந்து இன்னும் 2 வாரங்களுக்குள் அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறினால், நாங்களும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் சட்டவிரோதமான பண்ணைகளை  நிறுவுவோம்.

அதன்பின்னர் வரும் விளைவுகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். மேலும் சீனா இதனூடாக கடலை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது என்பதனை இந்தியா உள்ளிட்ட  நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post