அமைச்சரவை கூட்டத்தில் தீர்வு வழங்காவிடின் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - ஜோசப் ஸ்டாலின் - Yarl Voice அமைச்சரவை கூட்டத்தில் தீர்வு வழங்காவிடின் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - ஜோசப் ஸ்டாலின் - Yarl Voice

அமைச்சரவை கூட்டத்தில் தீர்வு வழங்காவிடின் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - ஜோசப் ஸ்டாலின்



இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிடின் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கையானது முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை திரும்ப அழைக்கும் வகையில் கல்வி அமைச்சின் செயலாளரால் ஒரு சுற்றறிக்கை வெளியிடபட்டதுடன், ஆசிரியர்கள் தங்கள் ஒன்லைன் கற்பித்தல் நடைமுறைகளைத் தொடருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

"கல்வியமைச்சினால் தீர்வுகளை வழங்காமல் ஒன்லைன் கற்பித்தலை நாங்கள் தொடர முடியாது. எனவே, எங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர முடிவு செய்துள்ளோம்  என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post