நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா கொடிசீலை வடிவமைப்பாளர்களிடம் காமாட்சி கையளிப்பு - Yarl Voice நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா கொடிசீலை வடிவமைப்பாளர்களிடம் காமாட்சி கையளிப்பு - Yarl Voice

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா கொடிசீலை வடிவமைப்பாளர்களிடம் காமாட்சி கையளிப்பு



வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post