ரணில் விக்கிரமசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் - Yarl Voice ரணில் விக்கிரமசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் - Yarl Voice

ரணில் விக்கிரமசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராகவே ரணில் விக்ரமசிங்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஆணைக்குழுவில் தனக்கு எதிராக அரசியல் பழி வாங்கல் தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை அதிகாரம் அற்றதாக அறிவித்து கட்டளையிடக் கோரி ரணில் விக்ரமசிங்க மனுத்தாக்கல் செய்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post