கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்குத் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதே சிறந்தது - வைத்தியர் சஞ்சீவ - Yarl Voice கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்குத் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதே சிறந்தது - வைத்தியர் சஞ்சீவ - Yarl Voice

கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்குத் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதே சிறந்தது - வைத்தியர் சஞ்சீவ




கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்குத் தடுப் பூசியை ஏற்றிக் கொள்வதே சிறந்தது என சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப் படும் முயற்சியில், எதிர்நோக்கப்படும் சிக்கல்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தடுப்பூசி முக்கியமானதாகும் என கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதே கர்ப்பிணித் தாய்மார் களின் பாதுகாப்பிற்குச் சிறந்ததாகும் என்றும் கடந்த சில வாரங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரி வித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post