மெனிகே மகே ஹித்தே பாடலைப் பாடி சர்வதேச அளவில் புகழ்பெற்ற இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு கொழும்பில் காணி ஒன்றை வழங்குவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் 9.6 பேர்ச் காணியை வழங்கு வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பான ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கலாசார அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
Post a Comment