நாவற்குழி புதிய குடியிருப்பில் குழு மோதல்; நால்வர் படுகாயம்! - Yarl Voice நாவற்குழி புதிய குடியிருப்பில் குழு மோதல்; நால்வர் படுகாயம்! - Yarl Voice

நாவற்குழி புதிய குடியிருப்பில் குழு மோதல்; நால்வர் படுகாயம்!



யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற குழு மோதலில் பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குழு ஒன்று மற்றொரு தரப்பின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய பின்னர் தாக்குதலுக்கு உள்ளான குழு தாக்குதல் நடத்திய குழுவின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இரு தரப்பு மோதல்களில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றும் நிலமையை கட்டுப்படுத்த முடியாத நிலையிலில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு புதிய குடியிருப்பு சுற்றிவளைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post