ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
காமினி செனரத் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றிய அனுபவமும் கொண்டதுடன் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாவார்.
Post a Comment