வாகனங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்படும் : கப்ரால் - Yarl Voice வாகனங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்படும் : கப்ரால் - Yarl Voice

வாகனங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்படும் : கப்ரால்



நாட்டுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கப் பெற்று, பொருளாதார நிலை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை இடைநிறுத்துவது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மற்றும் ஓடுகள் தவிர அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் பெருமளவிலான அந்நியச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post