இலங்கையரான பிரியந்தவின் கொலையாளிகளைத் தண்டிக்க பாக். மீண்டும் உறுதி - Yarl Voice இலங்கையரான பிரியந்தவின் கொலையாளிகளைத் தண்டிக்க பாக். மீண்டும் உறுதி - Yarl Voice

இலங்கையரான பிரியந்தவின் கொலையாளிகளைத் தண்டிக்க பாக். மீண்டும் உறுதி



சியால்கோட்டில் உள்ள இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவின் கொலையாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் மீண்டும் உறுதியளித்துள்ளது.

குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என பஞ்சாப் மாநில சட்ட அமைச்சர் பஷரத் ராஜா லாகூரில் உள்ள இலங்கையின் கவுன்சிலர் நாயகமான யாசின் ஜோயாவிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் நாள்தோறும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றார்.

நேற்று (19) நடைபெற்ற கூட்டத்தில், இந்தச் சம்பவம் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தால் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள  முன்னேற்றங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கவனித்து வருவதாக ஜோயா கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post