கொழும்பு மேயரின் யாழ் விஜயம் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்! - Yarl Voice கொழும்பு மேயரின் யாழ் விஜயம் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்! - Yarl Voice

கொழும்பு மேயரின் யாழ் விஜயம் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்!



கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க மாற்றும் உறுப்பினர்களின் யாழ் விஜயம் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெபநேசன் தெரிவித்தார்.


கொழும்பு மாநகர சபையின் தவிசாளர் உட்பட உறுப்பினர்களின் யாழ்.விஜயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மத்திக்கு எடுத்து வரும் நிலையில் கொழும்பு மாநகர முதல்வர் இன்று விஜயம் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டுறவுடன் செயற்படுவதற்கு வழிவகுக்கும்.


குறித்த சந்திப்பில் தவிசாளருடன் உறுப்பினர்களான ரமணன் மற்றும் ஜிப்ரிக்கோ கலந்துகொண்டு மானிப்பாய் பிரதேச சபையின் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.

 இதன்போதே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறித்த விடையங்கள் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களுக்குட்பட்டு எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பட்ட வேலைத்திட்டங்களை நாங்கள் செய்து வருகின்றோம்.

 அவ்வாறான திட்டங்கள் செய்து வருகின்றபோது மத்திய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையில் போட்டி நிலை காரணமாக பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

 குறிப்பாக புங்குடுதீவில் அமைக்கப்படவுள்ள குடி நீர் திட்டத்தை கல்லுண்டாய்வெளியில் மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது தற்சமயம் புங்குடுதீவுக்கே அமைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


குறித்த விடையத்தில் புங்குடுதீவுக்கே அது வழங்குவதற்கான திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது ஆனால் அதனை கல்லுண்டாய் வெளிக்கு மாற்றலாம் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இதனால் அந்தத் திட்டத்தை எங்கு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக குழப்ப நிலை காணப்பட்டு புங்குடுதீவிற்கே வழங்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

 இது தேவையற்ற குழப்பமாகவே தோன்றியது இது இருவருக்குமிடேநே உள்ள போட்டி தன்னமயால் உருவானது இது மட்டுமன்றி மானிப்பாய் காரைநகர் வீதி காப்பெற் வீதியாக புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

 குறித்த வீதிகளிலுள்ள கால்வாய்கள் மதகுகள் புனரமைக்கப்படாமலே காப்பெற் போடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது எங்களாலும் பொது மக்களாலும் குறித்த விடையம் வீதியியில் அபிவிருத்தி அதிகார சபைக்கு மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. 

 இதற்குப் பின்னர் குறித்த வீதி மானிப்பாய் பகுதி அபிவிருத்தி பணியில் கால தாமதம் ஏற்படுத்தப்படுகின்றது. இது ஒது பழிவாங்கும் நடவடிக்கையாகவே நாங்கள் உணருகின்றோம்.

 இவ்வாறாக பல திட்டங்கள் முறையற்ற விதத்திலும் திட்டமிடப்படாமலும் இடம் பெற்று வருகின்றது இவை தொடர்பில் உரிய இடங்களுக்கு நாங்கள் முறையிட்டுள்ளோம். இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை .

0/Post a Comment/Comments

Previous Post Next Post