எரிபொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!! - Yarl Voice எரிபொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!! - Yarl Voice

எரிபொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!!




டீசல் பெற்றுக் கொள்வதற்காக நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து இன்றைய தினம் டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ள அவர்  அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post