அரசியல் நோக்கத்திற்கானதா பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம்! சுரேஸ் கேள்வி - Yarl Voice அரசியல் நோக்கத்திற்கானதா பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம்! சுரேஸ் கேள்வி - Yarl Voice

அரசியல் நோக்கத்திற்கானதா பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம்! சுரேஸ் கேள்வி




 ஐநா சபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்ட நீக்கம் தொடர்பிலா பிரேரணைகளை அரசியல் நோக்கத்திற்காக கையெழுத்து போராட்டமாக ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்குமாறு ஏற்கனவே ஐநாவிடம் நாம் கோரிக்கை முன் வைத்துள்ளோம்.

தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது அரசியல் நோக்கத்துக்காக செய்யப்படுகிறதா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது.


ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் மாற்றம் சபாநாயகராக இருந்த கரு ஜயசூரிய மற்றும் முஸ்லிம் தரப்புகளும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தில் பங்குபற்றி கையெழுத்திட்டிருந்தனர்.

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபது பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது
 அப்போது அவருக்கு இது பாரதூரமான சட்டமாக தெரியவில்லையா?

நல்லாட்சி அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டார்கள் அப்போது அரசாங்கத்தை பிழைத்து படுத்திய கரு ஜயசூரியவுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் பாரதூரமான சட்டமாக தெரியவில்லையா?


கடந்த காலங்களில் முஸ்லிம் தரப்பினர் தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு ஏன் முன்வரவில்லை.

இப்போது இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கூறுவது ஆட்சி அதிகாரம் தங்களிடம் இல்லை தங்களின் சுதந்திரம் பறிபோய் விடும் என்பதற்காகவே கையெழுத்துப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே நாம் போராடி வருகிற நிலையில் சில தரப்பினர் தமது அரசியல் தேவைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்துப் போராட்டத்தை நடத்துவது வேடிக்கையாக உள்ளது.

முஸ்லிமாக்கள் தற்போதைய அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட நிலையில் இப்போதுதான் அவர்களும் உணர்கிறார்கள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என.

பயங்கரவாத தடைச்சட்டதினால் போரில் ஈடுபட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படாத நிலையில் சாதாரண மக்களே குறித்த
 சட்டத்தினால் பல காலமாக சிறைகளில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்கள் அனைவருடைய எதிர்பார்ப்பும் என அவர் மேலும் தெரிவித்தார்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post