தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் – மஹேல - Yarl Voice தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் – மஹேல - Yarl Voice

தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் – மஹேல


தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் 
ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் வாக்கெடுப்பின் மூலம் மீணடும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ட்விட்

டர் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

"இது நகைச்சுவை என்று நினைத்தீர்களா? நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த நியமனம் முக்கியமானது போல் நேரத்தையும் பணத்தையும் வீணடித்து, மீண்டும் அவர் ராஜினாமா செய்கிறார். தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும்." இவ்வாறு அவர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post