யாழ் பருத்தித்துறையில் கோஷ்டி மோதல்! பலர் காயம் - Yarl Voice யாழ் பருத்தித்துறையில் கோஷ்டி மோதல்! பலர் காயம் - Yarl Voice

யாழ் பருத்தித்துறையில் கோஷ்டி மோதல்! பலர் காயம்



பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 நேற்று புதன்கிழமை(01) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்ரொழிலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இம் மோதல் ஏற்பட்டதாகவும் இதில் வாள், கொட்டங்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கொட்டடி பருத்தித்துறையைச் சேர்ந்த சிறிமுருகன் சிறிஅஜன் (வயது- 23) வியாபாரிமூலை பருத்தித்துறை சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது-30) பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது- 26) பொன்னம்பலம் ரகுநாதன்

 (வயது- 39) தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது- 41) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post