யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான சர்வதேச ஆய்வு மாநாடு - Yarl Voice யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான சர்வதேச ஆய்வு மாநாடு - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான சர்வதேச ஆய்வு மாநாடு



யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்தினால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும்  “விஞ்ஞானம்” சர்வதேச ஆய்வு மாநாடு நோர்வே நாட்டின் மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்ககலைக்கழகத்தின் பங்களிப்புடன் " புதிய இயல்பு நிலையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை முன்னிறுத்தல்' எனும் தொனிப்பொருளில் இன்று (ஜூலை 21 ஆம் திகதி, வியாழக்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகள் (Jaffna University International Research Conference – JUICE 2022) வரிசையில் இடம்பெற்ற  இம் மாநாட்டில் நோர்வே, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியாவின் பிரபல்யமான பல்கலைக்கழகங்களை சேர்ந்த விஞ்ஞானப் பேராசிரியர்கள் கருத்துரைகளை வழங்கினர்.  உயிரியல் விஞ்ஞானம், இரசாயன - பௌதீக விஞ்ஞானம், கணனி - தகவல் தொழில் நுட்பம், சக்தி - சூழலியல் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானமும் தொழில்நு
ட்பமும், கணிதம் - புள்ளிவிபரவியல், விஞ்ஞானக்கல்வி எனும் உபதலைப்புக்களில் சர்வதேச மற்றும் இலங்கை ஆராச்சியாளர்களால் 43 ஆராச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  இம் மாநாட்டுக்கு நோர்வே நாட்டின் இலங்கைத் தூதரகம், நோர்வேயின் திறன் மற்றும் உயர் கல்விக்கான பணிப்பாளர் அலுவலகம் என்பன நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளன. 

இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழகத்
 துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் என். சண்முகலிங்கன், வாழ் நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பீடாதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு நிகழ்வுகள், இணைய வழியிலும் நேரலையாகவும்  இடம்பெற்றது.






0/Post a Comment/Comments

Previous Post Next Post