அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் நெடுந்தீவில் கைது! - Yarl Voice அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் நெடுந்தீவில் கைது! - Yarl Voice

அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் நெடுந்தீவில் கைது!



இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று(23) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post