யாழில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்! பெருமளவானோர் பங்கேற்பு! - Yarl Voice யாழில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்! பெருமளவானோர் பங்கேற்பு! - Yarl Voice

யாழில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்! பெருமளவானோர் பங்கேற்பு!


மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியொன்று யாழ் நகரில் இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார பிரிவினரால் இந்த விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கபட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது யாழ் நகர் ஊடாக யாழ்ப்பாண பிரதேச செயலகத்தை சென்று நிறைவடைந்த்து.

இப் பேரணியில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்ஷன் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தவரூபன் சுகாதார பணிமணை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











0/Post a Comment/Comments

Previous Post Next Post