தற்போது பெய்து வரும் மழையால் நுளம்புகள் பெருகுவதால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அகற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment