நாட்டில் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்த பிள்ளையானுக்கு இன்று நடக்கும் விடயங்கள், தற்போது ஜே.வி.பி.யுடன் இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
Post a Comment