![]() |
| வேட்பாளரை தாக்கிய மேலும் இருவர் கைது |
இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைதாகி நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.
கைதானவர்கள் இருவரும் கலைமதி பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களை நேற்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவித்த மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் வழக்கை மார்ச் 5ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Post a Comment