முல்லைத்தீவில் சிங்கள, தமிழ் மீனவர்களிடையே முறுகல் - Yarl Voice முல்லைத்தீவில் சிங்கள, தமிழ் மீனவர்களிடையே முறுகல் - Yarl Voice

முல்லைத்தீவில் சிங்கள, தமிழ் மீனவர்களிடையே முறுகல்

தென்னிலங்கை மீனவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களுக்கும் இடையிலேயே நாயாறு பிரதேசத்தில் இன்று முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

நாயாறுப் பகுதியில் மேலதிகமாக சிங்கள மீனவர்களை கொண்டுவந்து குடியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையினை அங்கு பூர்வீகமாக உள்ள தமிழ் மீனவர்கள் எதிர்த்ததினாலேயே மேற்படி முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post