மகாகவி பாரதியாரின் 133 ஆவது ஜன்ன தினம் இன்று புதன்கிழமை யாழில் நடைபெற்றது.
யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூரிலுள்ள பாரதியார் சிலையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது பாரதியாரின் சிலைக்கு மலர் மாலை அசிவிக்கப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்தோடு பாரதியார் பாடலும் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் இந்திய துணை தூதுவர். கே. பாலச்சந்திரன் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment