ஐ.தே.கட்சியை நம்பி ஏமாந்துவிட்டோம் என்கிறார் சிவஞானம் - Yarl Voice ஐ.தே.கட்சியை நம்பி ஏமாந்துவிட்டோம் என்கிறார் சிவஞானம் - Yarl Voice

ஐ.தே.கட்சியை நம்பி ஏமாந்துவிட்டோம் என்கிறார் சிவஞானம்

ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகடோபர் மாதமே ஏமாற்றி விட்டார்.அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான் என தெரிவித்துள்ள தமிழரசுக் கடசியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகடோபர் மாதத்தில் ஏமாற்றி விட்டார்என்று எமக்கு தெரிய வந்துவிட்ட்து. அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான். ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒகடோபர் அரசியலமைப்பு அறிக்கை பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்படட போது குழப்பம் வந்த போது  இதற்கு நான் பொறுப்பில்லை சபையே பொறுப்பு என கூறியிருந்தார். அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றி விடடார் என நாம் அறிந்து கொண்டோம். எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் மகிந்த குடும்பத்தின் ஆடசிக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம்.

இனிவரும் காலங்களில் ஐ.தே.காவுக்கு ஆதரவான பாராளுமனற பிரதிநிதிகள் இருக்க மாடடார்கள்.நாம் பட்டு தெளிந்து விடடோம்.நாம் அனைவருடனும் பேசுவோம் அதற்காக ஐக்கிய தேசியக் கடசிக்கு தான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை.இனி நிபந்தையுடனேயே இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம்.ஏற்கனவே நாம் அனுபவப் பட்டுவிடடோம்.

மேலும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அண்மைக்காலமாக இந்த நாட்டில் இனப் பிரச்சனை என்று ஒன்று இல்லை என்று அது பொருளாதார ரீதியான பிரச்சனையே என கூறிவருகின்றார். அவருடைய கருத்து தவறானது.இந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் அல்லது அதற்கு முன்னரும் கூட இங்கு வாழும் தமிழ் மக்களின் தனித்துவ தன்மை பேணப் படவேண்டும். எமது இனம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தன.இப்போதும் இருக்கின்றது.

எமது தமிழ் இனம் மத மொழி ரீதியாக தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நாட்டில் இனப் பிரச்சனை உள்ளது என்பதை கடந்த கால அரசுகள் ஏற்றுள்ளனர். கடந்த ஆடசியில் கூட இனப் பிரச்சனைக்கான தீர்வில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் வழிகாடடல் குழுவில் கோத்தபாயவின் தரப்பினரும் இருந்தனர். தமிழர்களுக்கு இனப் பிரச்சனை இல்லை என்றால் ஏன் பங்குபற்றினீர்கள் எனவே எமது இனப்பிரச்சனையை தட்டிக்கழிக்க முடியாது. அரசுக்கு அதனை தீர்க்கும் கடமை இருக்கின்றது.பொறுப்புக் கூறலில் இருந்து விலக முடியாது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ காணாமல் போனவர்களை சுட்டுக்கொல்லவில்லை என்று கூறியுள்ளார். நாம் காணாமல் போனவர்களை சுட்டுக் கொன்கிறீர்கள் என சொல்லவில்லை. நாம் இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறவுகளினால் கையளிக்கப்படடவர்களுக்கு என்ன நடந்தது?அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றே கோரி வருகின்றோம்.எனவே அதனை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post