தேவை ஏற்பட்டால் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோருவோம், தேர்தலை பிற்போட்டதற்கு நன்றி தெரிவித்த கூட்டமைப்பு - Yarl Voice தேவை ஏற்பட்டால் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோருவோம், தேர்தலை பிற்போட்டதற்கு நன்றி தெரிவித்த கூட்டமைப்பு - Yarl Voice

தேவை ஏற்பட்டால் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோருவோம், தேர்தலை பிற்போட்டதற்கு நன்றி தெரிவித்த கூட்டமைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலமை பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்துமாக இருந்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசிடம் கோரும்.

இவ்வாறு தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுமாறு இதுவரையில் அரசிடம் கூட்டமைப்பு கோரவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலையினை கருத்தில் கொண்டு தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல்கள் அலுவலகத்திற்கு நன்றி கூறுகின்றோம். நாட்டின் நிலமை சுமுகமடைந்த பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில் தேவை ஏற்படின் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சட்டத்தில் இடமுன்டு. குறிப்பாக ஜனாதிபதி தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரிமையின்படி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான தேவை ஏற்படின் பாராளுமன்றத்தை கூட்டலாம். 

இன்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையை சமாளிப்பாதற்கான தேவையான ஆலேசனைகளை மற்றும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்தை கூட்டி அதன் ஊடாக மேற்கொள்ளலாம். இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை.

இருப்பினும் இதுவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கேட்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நிலமையை அவதானிப்போம். கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை. அவ்வாறான ஒரு கூட்டம் கூட்டப்பட்டால் கூட்டமைப்பும் அதில் கலந்து கொண்டு அனைவருடைய கருத்துக்களையும் அறிந்து அவசரகால நிலமை பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டிய தேவையை கொடுக்குமாக இருந்தால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை கூட்டமைப்பு முன்வைக்கும்.

இருப்பினும் தற்போது அந்த கோரிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுக்கவில்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post