யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி மற்றும் சுன்னாகம் பகுதிகளில் இருந்து கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று இருவர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்திணசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று நேற்று முன்தினம் அனலைதீவில் இருந்து இருந்து கொரோனோ சந்தேகத்pல் அனுமதிக்கப்பட்டவருக்குமு; கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Post a Comment