கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி ஆகிய தமிழ்க் கட்சிகள் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளன - Yarl Voice கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி ஆகிய தமிழ்க் கட்சிகள் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளன - Yarl Voice

கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி ஆகிய தமிழ்க் கட்சிகள் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளன


பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வடக்கில் போட்டியிடும் முக்கிய தமிழ்க் கட்சிகள் பலவும் நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய யாழ் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன நாளை காலை யாழ் மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று வன்னித் தேர்தல் தொகுதி மற்றும் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கும் இக் கட்சிகள் வேட்பு மனுக்களை நாளை தாக்கல் செய்யவுள்ளன.

இதே வேளை ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி நாளை மறுதினம் புதன்கிழமையே வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் வடகிழக்கில் போட்டியிடும் தேசிய கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியைப் பொறுத்தவரையில் பல சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே போன்றும் இன்னும் சில சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post