உள்ளே வந்தார் ஆர்னோல்ட் வெளியே போனார் அம்பிகா - தமிழரசின் வேட்புமனு தயார் - Yarl Voice உள்ளே வந்தார் ஆர்னோல்ட் வெளியே போனார் அம்பிகா - தமிழரசின் வேட்புமனு தயார் - Yarl Voice

உள்ளே வந்தார் ஆர்னோல்ட் வெளியே போனார் அம்பிகா - தமிழரசின் வேட்புமனு தயார்

தமிழரசுக் கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில் களமிறங்கப்படவிருந்த அம்பிகா சற்குணநாதன் நிராகரிக்கப்பட்டு யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோலட் வேட்பாளராக சேர்த்தக் கொள்ளப்பட்டுள்ளார்.

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேட்புமனு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து வேட்பாளர்கள் இன்று கையொப்பமிட்டனர்.

இந் நிகழ்வு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று மதியம் இடம்பெற்றது. இதன் போது மாவை சேனாதிராசா, எம்,ஏசுமந்திரன், சரவணபவன், கஐதீபன், ஆர்னோலட் திருமதி ரவிராஐ;, சுரேந்திரன் தபேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். ஏனையவர்கள் நாளை காலை கையொப்பமிடவுள்ளனர்.

இதே வேளை தமிழரசுக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் வேட்பாளர் தொடர்பில் பெரும் குழப்பங்கள் நீடித்து வந்திருந்தன. அதிலும் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் நியமனத்திற்கு எதிராக கட்சிக்குள் கடும் எதிர்ப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

இவ்வாறான நிலைமையிலையே அம்பிகா சற்குணநாதன் நீக்கப்பட்டு ஆர்னொலட் உள்வாங்கப்பட்டுள்ளார். இதற்கமைய தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுத் தாக்கல் நாளை காலை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post