கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து 78 பேருக்கான covid - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்
வவுனியா பொது வைத்தியசாலை - 4 பேர்.
யாழ் மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள்(சாரதி மற்றும் உதவியாளர்) - 30 பேர்
வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள் (சாரதி மற்றும் உதவியாளர்) - 10 பேர்
மன்னார் மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து கடமையின் நிமித்தம் வந்தவர்கள் - 13 பேர்.
இவ்வாறான நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்களில் 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என பரிசொதனை அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment