யாழில் 78 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் 78 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் 78 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

கொரோனோ சந்தேகத்தில் யாழில் 78 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்குமு் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து 78  பேருக்கான covid - 19  பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள்  - 7 பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர்  பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்

வவுனியா பொது வைத்தியசாலை - 4 பேர்.

யாழ் மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள்(சாரதி மற்றும் உதவியாளர்) - 30 பேர்

வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள் (சாரதி மற்றும் உதவியாளர்) - 10 பேர்

மன்னார் மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து கடமையின் நிமித்தம் வந்தவர்கள் -  13 பேர்.

இவ்வாறான நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்களில் 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என பரிசொதனை அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post