யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதிபராசக்தி மன்றத்தால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதிபராசக்தி மன்றத்தால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதிபராசக்தி மன்றத்தால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றம் ஏற்பாட்டில் இன்றையதினம் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்  கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே.259 கல்வியன்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும்  75 குடும்பங்களுக்கே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொருட்கள் இன்றையதினம் இரண்டாம் கட்டமாமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றம் ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிவாரண பொதிகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றம் அங்கத்துவர்கள் மக்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post