கம்பஹா மாவட்டத்தின் சீதுவ பகுதியில் உள்ள இராணுவ முகாமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த முகாமில் உள்ள இராணுவ அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து முகாம் பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அடுத்து முகாம் மூடப்பட்டுள்ளது.
அந்த இராணுவ அதிகாரி வெளிசற முகாமை சேர்ந்த பெண் கடற்படை அதிகாரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிசற முகாமில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த முகாமில் இருந்த பலருக்கும் தற்பொது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment