யாழில் துவிச்சக்கர வண்டியில் வீதியால் சென்ற வயோதிபர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் - Yarl Voice யாழில் துவிச்சக்கர வண்டியில் வீதியால் சென்ற வயோதிபர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் - Yarl Voice

யாழில் துவிச்சக்கர வண்டியில் வீதியால் சென்ற வயோதிபர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

துவிச்சக்கர வண்டியில் வீதியில் சென்ற வயோதிபர் ஒருவர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி நாவலர் வீதியில் இன்று மாலை 6.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

யாழ்ப்பாணத்தில் இன்று ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கின்ற நிலையில் துவிச்சக்கர வண்டியில் வீதியால் முதியவர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

வீதியில் சென்று கொண்டிருக்கும் போதே குறித்த முதியவர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-65) என்பவரே உயிரிழந்தவராவார்.

உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து 1990 அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு அம்புலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post