யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்று முதல் கட்டம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
ஊரடங்கு சட்ட நடைமுறையால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். அவர்கள் தமது சொந்த மாவட்டங்களுக்குச் செல்வதற்கு விருப்பம் வெளியிட்டிருக்கின்றனர்.
ஆனாலும் நாட்டில் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக அவர்களை அனுப்ப முடியாத நிலைமை இருந்தது. ஆனால் தற்பொத சில மாவட்டங்கள் தவிர ஏனைய பல இடங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் ஊரடங்கு தளர்த்தப்படாத மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விரைவில் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
அதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலகம் மேற்கொண்டு வருவதாகவும் இன்று முதல் கட்டம் கட்டமாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
Post a Comment