யாழில் இன்று 76 பேருக்கு ஆய்வுகூடப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 75 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதே வேளையில் தனிமைப்படுத்தலில் இருந்து யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று என் 13 ஏப்ரல் உறுதிப்படுத்தபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று 76 பேருக்கான covid - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 9 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.
ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.
வவுனியா பொது வைத்தியசாலை - 3 பேர்.
முல்லைத்தீவு பொது வைத்தியசாலை - ஒருவர்.
முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.
முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் - 54 பேர்.
(வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு 26 ஏப்ரல்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் 21 ஏப்ரல் முல்லைத்தீவு பதவிசிரிபுர நோக்கி பயணித்த ஏனைய படைவீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்)
Post a Comment